Tuesday, July 9, 2013

தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவை...

பூங்காக்களில் மரங்கள்
பேசி கொள்கின்றன!!!

அசைவில்
தெரியபடுத்துகிறது
நீ வரும் நேரத்தை !!!

.............................................

நடைபாதை
கற்கள் பேசி கொள்கின்றன!!

உன் மென்மையான நடையை!!!!


........................................................

புரிதல் இல்லா அன்பு

பொய்த்துவிடும்
பூக்கள் மலரும் காலையில்!!

.......................................................


மேகக் கூட்டம்

கதைக்கிறது
ஒன்று கூடி!!!

மழைக்கான நேரம் கணிக்க!!!

....................................................


காத்திருப்பது 

என் நினைவுகளும் !
என் உணர்வுகளும்!

காற்றில் நிரப்புகிறேன் !
யாரும் அறியாமல்
உன்னை ஸ்பரிசிக்க!
.....................................................

உன் நினைவெனும் பாசி

பசுமையாய் என் 
மனக்குளத்தில்!!!

...................................................


காதல் கரையான்கள்

சட்டென்று அழித்து விடும்
வாழ்வை !!!

இனம்புரியா
காதல் "புரியாத போதை”

....................................................


நினைவெனும் வெல்லம்

சுவையாகத்தான் 
சில பொழுதுகளில்!!!

...................................................


சுற்றும் காற்றாலையின்

வேகம் கூடுகிறது.

காற்றாய் நான்!!!!

..................................................


காணும் கண்களில்

கவிதையே எப்போதும்..

என் அருகினில் நீ!!! 

.......................................................


Saturday, April 13, 2013

உன் முப்பொழுதுகளிலும் காதல் மட்டுமே!!!!!

என் முப்பொழுதுகளும்

உன்னுடையதெனின்,
உனை நினைக்கும்
பொழுதுகளே
என்னிடம் இல்லை”
*******************************************
”சின்ன சங்கிலியில்
உயிரெழுத்தாய் -என்
முதலெழுத்தை
இணைத்து கொண்டாய்”
***********************************************
உனை காணாமல்
தவித்த என் விழிகளும்
இதழுடன் சேர்ந்து
புன்னகைத்தது ,
நீ வருகிறாய் என் பொழுதுகள் முழுதும்
*********************************************
என் மனதில் உறைந்த
உன் நினைவுகள்
உருகி தான் போயின
சலனத்தில் ”
”உறைந்து போன
உன் நினைவுகளால்
மரத்துதான் போன மனம் என் பொழுதுகள் முழுதும்
**********************************************
ஒளி கீற்றுகளுக்குள்
சிக்கிய இருளாய்
உன் புன்னகை
எனக்குள் பொதிந்து
கிடக்கிறது, உனை
காணும் வரை”
உனை எதிர்பார்த்து
காத்திருப்பதுமில்லை
நீயே நானான பொழுதுகளில்”
**************************************************

”காதலில் வீழ்ந்தது முதலில்

நான்தான், என்று பொய்யாய்
சொல்லி, ரசிக்கிறாய் என்னை உன் முப்பொழுதுகளிலும் ”

Friday, March 22, 2013

தம்பி.....................



உனை காண வரும்
பொழுதில், உன்
உயிர் துடித்து
விடை பெறும்
தருணம்
உனை பெயர்
சொல்லி அழைத்தேனே
தெரிந்ததா உனக்கு?என்னை

எனை பார்த்தாயா?
எப்படி வந்தேன்!
என நினைத்தாயா?
என் கண்ணீர் கண்டாயா?

உன் விழியோர கண்ணீர்
வழிந்தோடி உன்
அன்பு கூற..உன் மூச்சு
மேலும் கீழுமாய்
எனை வா, என்று
சொல்வது போல்,
அய்யோ!!! என அலரும்
குரல். அந்த தருணம்

உன் முகம் நான்
பார்க்க, எங்கேயடா
போனாய்!
எப்படியடா போனாய் !
எங்களை விட்டு
உன் உயிர் காற்று
காண்கையிலேயே
காணாமல் போனது
எப்படி!!!!

எங்கு எப்போது
காண்பேன்
உனை இனி.
வாழ்வு உனக்கு
ஏனடா ? முடிந்தது?
போதுமா டா?
இவ்வுலக வாழ்வு...