Wednesday, October 17, 2012

விதியத்து............



உன்னை தேடி ஓடி ஓடி ...
வாடி வதங்கிய கால்கள் ...
உன்னை காணாமல் ...
உன்னை சுமந்த
என் வயிறு...வதங்கி போய்
உணவு உண்ணாமல்
சுருங்கி கிடக்க ....

உன்னை காண என்
விழிகள் ஏங்கி, வைத்த
விழி மாறாமல் வழி பார்த்து
ஏங்கி கிடக்க ..

வருவோரை ..
போவோரை ....
பார்த்து கண் பூத்து போய் ..

இதோ வருகிறேன் என்று
நீ விட்டு சென்ற
இடத்திலே நான் ...
விதியத்து..

துயரம் ...




என் முகம் முழுதும்
ஓடும் சாலைகள்
நீ வருவாய் என
காத்திருக்கிறது ..

என் தலை முழுதும்
முடிகள்..ஆனாலும்
உன் சிந்தனைகளால்
நரைத்து போய்...

என் விரல்களில் நீ
அணிவித்த மோதிரம்
இளமையாய் ...
இருக்கமாய் இன்னும் ..

உனக்கு பிடித்த என்
மூக்குத்தி
எனக்குள்ளே
பொதிந்து போய்...

என் விழி முழுதும்
உன்னை தொலைத்த
துயரம்

Monday, October 1, 2012

"அப்பா" எனும் மானுடம்!






ஜானு………என் ஜானு…...கடலைப்பார்த்ததும் அவளின் நினைவு தான் எனக்கு.

மாலை மயங்கும் நேரம் பேத்திகள்மீனுவும் வீணாவும், என் கையை பிடித்து கொண்டே
ஆடி ஓடி வந்தனர் ."தாத்தா கொஞ்சம் அலையில கால் வைக்கிறோம் , அம்மா கிட்ட சொல்லாதீங்க" என்று சொல்லிட்டு வேகமாக ஓடி... கடல் அலையில் விழுந்து புரண்டனர் .எனதுநினைவுகள் ஜானுவை நோக்கி செல்ல .. நேரம் போனதே தெரியவில்லை சட்டென்று வீணு முகத்தில் அடித்த தண்ணீர் என்னை நினைவுக்கு கொண்டுவர .."என்னம்மா போகலாமா" எனக் கேட்க .."இல்லை தாத்தா இன்னும கொஞ்சம் நேரம்"என்று சொல்லி பட்டம் வாங்க ஓடினாள்.

கூட்டம் அதிகமில்லை என்றாலும் வந்தவர்கள் அனைவரும்தத்தம் குடும்பத்தினரோடு எல்லோர் கையிலும் பட்டம் ,அதைக் கடற்காற்றில் அலைய விட்டு விளையாடி கொண்டிருந்தனர். அலைகளின் சீற்றம் அதிகமாகி கொண்டே இருந்தது அலைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததில் இருட்டவும் ஆரம்பித்திருந்தது..மருமகள் ஏதும் சொல்லிவிடுவாளோ எனும் யோசனையோடு திரும்பிப்பார்த்தேன். அவர்கள்விளையாட்டு முடிவதாய் தெரியவில்லை ..

"நேரமாகிறது கண்ணுங்களா ,வாங்க வீட்டிற்கு போகலாம்"னு சொல்லி கொண்டே அவர்களின் அருகாமையில் சென்றேன் ..பட்டத்தை விட்டு விட்டு ,பந்து தட்டி விளையாடி கொண்டிருந்தார்கள் ..அவர்களின் கைப்பிடித்திழுக்க "இருங்க தாத்தா வருகிறோம்" என்று சொல்லிவிட்டு ,கொஞ்சம் தொலைவில் அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடியிடம் பந்தை கொடுத்து நன்றி சொல்லிவிட்டு வந்தார்கள் ..என் கைபிடித்து ஆடிக்கொண்டே வந்தார்கள் சாலை முழுதும் ,"தாத்தா வேகமாக வாங்க ,வாங்க" என சொல்லி கொண்டே மீனு ஓடினாள்,வீணா என் கைபிடித்து வந்தாள் மெதுவாக ..அழகான சாலை இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்த அந்த புற நகரில் கடற்கரைக்கு எதிரேயுள்ள அழகான வீடு என் மகனுடையது .

வீட்டினுள் நுழையும் போதே மருமகள்மலர் "கைகால்களைக் கழுவிவிட்டு உள்ளே வாருங்கள் " என்று முணுமுணுத்துகொண்டே போனாள் ..பிள்ளைகளை இழுத்து கொண்டே, "படிக்கவேண்டாமா? நேரத்துடன் வருவதில்லையா, இருங்கள் அப்பா வரட்டும்.. சொல்கிறேன் என்று கோபமாய் கத்திக்கொண்டே குழந்தைகளை அடித்தாள். அழுது கொண்டே அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர் . நேராக பூஜை அறை சென்று வணங்கி விட்டு புத்தக பைகளுடன் மாடிக்கு சென்றனர்.. அடித்து கொண்டிருந்த தொலை பேசியை எடுத்து "ம்.சொல்லுங்க" என்று குரல் குழைவானதில் எதிர்புரத்தில் பேசுவது என்மகன் என்பது தெரிந்தது .

எழுந்து வெளியே சென்று அமர்ந்தேன் . அந்த இருட்டினில் குளிர் காற்றினில் அலைகளின் மொழி எனக்குள் பேசியது.. ஒருமுறையாவது கடலை பார்க்க வேண்டும்.அலையினில் கால் நனைக்க வேண்டும் என்ற அவளின் ஆசையைநிறைவேற்றவே இல்லை நான். ஜானு.. ஜானு ..என்னை தேடி வந்தவள்..
எனக்காகவே வாழ்ந்தவள் ,எனை ஒரு துளி நேரமேனும் பிரியாதவள் .அப்படியே எழுந்து வாசல் கதவின் அருகே நின்று அலையின் சத்தத்தை
ரசிக்க என் காதில்"என்னை விட்டு ஓடி போக முடியுமா ,நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ".என என் ஜானு பாடும் குரல் காதில் ஒலித்தது...
அவளின் நினைவுகளோடு அப்படியே கடலை நோக்கி நடந்தேன்..

என் மகன் மோகன்பிறந்த முதல் பிரசவத்திலேயே தன்நினைவற்றுப்போக அன்றிலிருந்து எனக்கு அவளே முதல் குழந்தையானாள் ..நினைக்க நினைக்க கடல்அலை போல அவளின் நினைவுகள் என் நெஞ்சில் அல்லாடியது ..என்ன மாயம் செய்தாளோ... என் வாழ்வில்... ஓடி விட்ட எங்கள் 46 ஆண்டுகால வாழ்கையைத் திரும்பி பார்க்கையில்... மோகன் வளர்ந்து காதல் திருமணம் செய்து ..அப்பப்பா ஆண்டுகள் ஓடியும் அவளின் மரணத்தன்று மட்டுமே எனை வந்து பார்க்க முடிந்தது அவனால் ..பதினாறாம் நாள் காரியம் முடித்து என்னை அவனோடு அழைத்து வந்து விட்டான் ... அன்றிலிருந்து அவனுக்கு பிரச்சனைகள் தான்.

அழகான நிலவொளியில் கடற்கரை மணலில் அப்படியே சாய்ந்தேன்..கண்களை மூட அருகினில் என் ஜானு..பாடுங்களேன் ன்னு கேட்க "சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி .............."

கதிரவனின் ஒளி அழுத்தம் இல்லாமல் ஒளிர , மெல்ல வெளியே வந்தாள் மலர்.... தேனீர் கோப்பையுடன்,'என்ன சொல்வேன் இவரிடம்' என்று யோசித்து கொண்டே நடந்துகொண்டிருந்தாள் .சத்தமில்லாமல் வாசலில் கார் வந்து நின்று மோகன் இறங்கியதும் "அப்பா வந்துட்டாங்க" என்று சத்தமிட்டபடி குழந்தைகள் ஓடிச்சென்று கால்களைக் கட்டிக்கொண்டார்கள் .

மலர் எதுவுமே பேசாமல் நின்று கொண்டிருந்தாள் . "அப்பா... அப்பா..."என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்த மோகன், வீடு) நிசப்தமாயிருக்க "அப்பா எங்கே?" என்ற கேள்விக்கு அவனின் முகத்தைப்பார்ப்பதை தவிர்த்தபடியே "உங்க கிட்ட பேசும்போது இங்கேதாங்க இருந்தார்... அப்புரம் எங்க போனார் ன்னு தெரியலையே" என்றவள் கூற.. "என்ன சொல்ற... காணோம்னா... எனக்கு சொல்லியிருக்கலாம் இல்ல...அய்யோ அவருக்குஇங்கு யாரையுமே தெரியாதே, கிராமத்தை விட்டு வெளியில் வந்ததே இல்லையே ,அங்கேயிருந்தால் அம்மா நினைவில் பாதிக்கப்படுவார் ன்னு நான் தானே அழைத்து வந்தேன்... இப்ப..எங்க போனாங்களோ..என்ன ஆச்சோன்னு தெரியலையே" என்று அரற்றிக் கொண்டிருந்தபோது வேலையாள் ரங்கன் பதட்டமாய் ஓடி வந்து.."அய்யா... அய்யா.." வார்த்தைகள் தடுமாறி வாய் குளரி வந்த திசையில் கைகாட்ட.... வேகமாக ஓடிய மோகன் கூடிநின்ற கூட்டத்தை தள்ளிவிட்டு பார்த்தபோது மணலில் "ஜானு" என்றெழுதியநிலையில் அவனது அப்பா தலைசாய்ந்தபடி கிடந்தார்.

காதல்ஆரம்பம் .... இப்படியும் ......பகுதி - 3





வேகமாக வந்தவன் எங்களை கடந்து ரயில் நிலையத்திற்குள்

சென்றான்...ரயில் பாதை கடந்து சென்றோம்.வேர்க்கடலை

விற்பவர் எங்களை நோக்கி வந்து

கேட்கும் முன்பே கொடுத்து விட்டார்..இரண்டு பொட்டலத்தை,

வாங்கி கொண்டு நேரத்தை பார்த்து கொண்டே நிலையத்தின்

நடுவிற்கு வந்து காத்திருந்தோம் "செங்கல்பட்டு ரயிலுக்காக "

அந்த புல்லெட்காரன் என் தோழியிடம் வந்து ஒரு சிறு பேப்பரை

கொடுத்து விட்டுசென்று விட்டான் ..அது ஒரு தொலை பேசி எண்,

சுந்தரி எதற்கடி என்னிடம் தந்தான் ..

புரியவில்லையே..என கேட்டு கொண்டே இருந்தாள்,என்னிடம்

தந்து விட்டாள் அந்த சீட்டை ...

ரயில் வந்ததும் ஏறிக்கொண்டோம் எங்களின் விருப்பமான பெட்டியில் ...

எற்கனவே எங்களுக்கு அங்கு இருக்கை பிடிக்கப்பட்டு இருந்தது..

செங்கல்பட்டு ரயில் அதனால் ,இனி வரும் நிலையங்களில் கூட்டம்

அதிகமாகும்..

எங்கள் பெட்டியில் மட்டும் நாங்களும் எங்களை "சின்னப்புள்ளைங்க "

என்று கூறும்சில பெரிய அக்காக்களும்..

ஆரம்பித்தாள் எப்போதும் போல சுந்தரி பாடுவதை .பெரிய

அக்காக்கள் கேட்பதைத்தான் அவள் முதலில்

பாடவேண்டும்.அவங்க தானே எங்களுக்கு இருக்கை பிடித்து

கொண்டு வருகிறார்கள் ,

ஆனால் .இன்று நான் கேட்ட பாடல் "அடி ஆத்தாடி இள மனசொன்னு

ரெக்கை கட்டி பறக்குது சரிதானா ?

என்ற பாடல்..சுந்தரி என்னை ஒரு முறை தன் பார்வையால்

எனக்குள் தேடினாள்..

பாடு பாடு என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு

ரசித்து கொண்டிருந்தேன் ..

அவள் பாடி முடிக்க முடிக்க மேலும் இன்னும் ஒரு முறை

என நாலு முறை அவளை பாட சொல்ல

"பக்கத்தில் அமர்ந்திருக்கும் "மாலை முரசு பத்திரிகையில் பணி

புரியும் தங்கம் அக்கா ..

என்னம்மா இந்த பாட்டு இப்படி ரசிக்கிற என கேட்க அப்போதுதான்

கண் விழித்தேன்...ஒண்ணுமில்ல அக்கா ,என சொல்லி

பார்க்க சுந்தரி ,இறங்க தயாரானாள் தாம்பரத்தில் ...

ரயில் நின்றதும் இறங்கி அவளை வழி அனுப்பி மீண்டும் ரயில்

உள்ளே நான் என்னுள்ளே அவனின் நினைவுகள்...

சுகமாக ஓடி கொண்டிருக்க "யம்மா வழி விடும்மா " என காட்டு

கத்தல் கத்தி கொண்டே அந்த கீரைக்காரி இறங்கினாள்.

அவளின் பிழைப்பே இந்த ரயில் தான் ...காலையில் அவளை பார்த்தால்

மங்களகரமாக அம்மன் போல இருப்பாள்..ஆனால் வாயிலிருந்து

வரும் அந்த புகையிலையின்

வாசம் குடலை புரட்டும்...ஆனால் நல்லவள் ,குடிகாரனுக்கு

பொண்டாட்டி.பிள்ளைகளை

படிக்க வைக்கணும் என்பதற்காகவே நாளெல்லாம் உழைப்பவள் ....

அவளுக்கு நான் என்றால் இஷ்டம் ..

நானும் இறங்கினேன் ..என்னோட அண்ணா எனக்காக காத்திருந்தார்

ரயில் நிலைய வாசலில் ...வேகமாக நடந்து

அண்ணாவின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன் ..அண்ணா எது பேசாமல்

மிதிக்க ஆரம்பித்தார் சைக்கிளின் வேகம் கூடியது

என்னோட நினைவுகளும் வேகமாக ஓடிகொண்டிருந்தது..எதிர்காற்றில்

வேகத்தை கூடி அண்ணா செல்ல ..அண்ணா கொஞ்சம் நிறுத்து அண்ணா

என சொல்லி கீழிறங்கினேன் வீடு வரை தள்ளி கொண்டே போகலாம்

என சொல்லி நடக்க ஆரம்பித்தோம்..அண்ணா பேசாமல் நடந்தார் ..

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அண்ணா எனை பார்த்து யாருக்காவது

நம்ம வீட்டு விலாசம் கொடுத்தியா மா .

இல்லையே அண்ணா ..அப்பாவுக்கு நண்பர்களை வீடு வரை கொண்டு

வருவது இஷ்டமில்லாத விஷயம் ,

அதிலும் உன் பெயர் போட்டு வாழ்த்து அட்டை வந்திருக்கு

என சொல்ல ,அதிர்ந்தேன் நான் ..

பயம் கூடியது யாராக இருக்கும் யாருக்கும் தரவில்லையே நான்..

அப்பா என்ன சொல்ல போகிறாரோ,என பயந்துகொண்டே நடந்தேன் .

அந்த எதிர்காற்றிலும் வேர்க்க ஆரம்பித்தது எனக்கு ...

வீடு நெருங்க நெருங்க வெலவெலத்து போனேன் நான்

வாழாவெட்டி................


உன் பார்வை உன் வாசம்
என்னை சுற்றிக்கொண்டே இருக்கிறது .
நான் நடக்கையிலும் என்னை சுற்றியே
என்னுடனே வீதிதோறும் வலம் வருகின்றது.

என்னை முழுமையாக
ஆக்கிரமித்து கொண்டிருகிறது .
நீ இல்லாத நேரங்களிலும் ..
என்னிடத்தில் மிக நெருக்கமாக அளவலாவுகின்றது .

நித்தம் நான் செய்யும்வேலைகள் அனைத்திலும்
என்னுடனே உலாவுகின்றது..
கோவத்திலும் சோகத்திலும் என் உள்ளே
சென்று என்னை அமைதியாக்குகிறது.

வாழாவெட்டியாக\" இருந்தாலும்
வாழ்ந்த காலங்களின் வாசம்-உன்
வாசம் மட்டுமே எனக்கு
புது தெம்பை தருகின்றது ..

உன் வாசம் என் வாழ்விருள்
போக்கி ஒளி தருகின்றது.
குத்தல் பேச்சுகள் நிறைந்த
இடங்களில் நீ என்னுடனே
என்னை அணைத்து உன் வாசத்திற்குள்
கூட்டி செல்கிறாய் ..

எப்போதுமே என்னருகினில் எனை சுற்றியே
நிறைந்திருப்பதால் ...உன்னை சுற்றியே
நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..
வாழும் நாட்களில் உன் வாசத்தில்
கரைகிறேன் ..

Wednesday, September 19, 2012

உயிரின் தோன்றல்



“நானே பயப்படலை..நீங்க ஏன் அதிகம் பயப்படறீங்க” ன்னு அவருக்கு

நான் தைரியம்சொல்லி வாசல்வரை போய் வழியனுப்பிவிட்டு....

வந்து தொலைக்காட்சியை அணைத்துவிட்டுத்தூங்க தாயரானபோது..

“ஏன் மா மாப்பிள்ளை அதிகம் பயப்படுகிறாரா….? ன்னு கேட்ட

அம்மாவிற்கு.............

சிரிப்பினூடே “ம்” என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்தபோது அருகில்

உட்கார்ந்து மெல்ல என் வயிற்றை தடவி ,“நாள் கடந்துடுச்சேடா ….

இன்னும் உனக்கான நாள் வரலையேப்பா ” என்று அம்மா சொன்னபோது,

முதல்முறையாய் எனக்குள் பயம் வந்தது….

காட்டிக்கொள்ளக் கூடாது என்று மறுபக்கம் திரும்பி படுத்தபோது

சன்னமாக வலித்தது..என் பயம்போலவே அதுவும் கொஞ்சம்

கொஞ்சமாக அதிகரித்தது .முகத்தை திருப்பி கட்டிலின் அருகே கீழே



தூங்கத் தயாரான அம்மாவிடம்…. “ம்மா வலிக்குதும்மா” எனச்

சொல்வதற்குள் இன்னும் அதிகமாக “வலிக்குதுமா ....

ரொம்ப வலிக்குதும்மா ..” என சன்னமாகக் கூற

“பொறுத்துக்கம்மா..பொய்வலியாய் இருக்கும்.. காலையில

டாக்டர்கிட்ட போகும்போது சொல்லலாம் டா” ன்னு சொன்னபோது..

“….ம்மா ..ரொம்ப வலிக்கிது ம்மா..” என்று வலியால் துடித்த

என் முகத்தைப்பார்த்துக் களேபரம் ஆன அவள் வாரிச் சுருட்டிக்

கொண்டு எழுந்தாள்...

இருவருமாய் கிளம்பினபோது, நடுக்கூடத்தில் அப்பா உறங்கிக்கொண்டு

இருந்தார் ..“நாங்க ஆஸ்பிடலுக்கு போறோம் கதவை பூட்டிகிங்க” என்று

சொல்லிக்கொண்டே என்னை தாங்கிபிடித்து நடந்தாள் அம்மா..

போகும்வழியில் அவருக்குச் செய்தி சொல்ல அவரும் அங்கு வந்துவிட்டார்..

அவர் இவர் என எல்லோரும் சுறுசுறுப்பாய் இயங்க கையில் ஊசி

குத்தப்பட்டு ட்ரிப்ஸ் இறங்கியது , வலி வந்து வந்து போகிறது ..

அப்படியே அந்த நாள் முழுதும் ,தாங்க முடியா வேதனை ...

ஆனால்… அன்றும் ஏதுவும் நடக்கவில்லை....ஒரு நாள் போனது வலியிலும்

வேதனையிலுமாய்….

மறுநாள் அத்தை வந்தாங்க….நிறைய பிரசவம் பார்த்தவங்க….

“ஏண்டிமா… எப்படி இருக்கே” "அருகில்வந்து பேசியது... எங்கேயோ

துரத்திலிருந்து கேட்பதுபோல் கேட்டது எனக்கு..."

”எத்தனையோ பிரசவம் பார்த்திருக்கேன் நான்…உனக்கு மட்டும்

இவ்வளவு பிரச்சனை ....” என்று சொன்னபோது பயம் என்னை மீண்டும்

தொற்றிக்கொண்டது.

…வலியும் வேதனையும் என்னையே அன்னியப்படுத்திக்கொண்டிருந்தன.

வந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் வெளியேற ..நான் மட்டும்

வலியுடன் உள்ளயே... “பயப்படாதே” எனச் சொல்லி அத்தையும்

வெளியே போனார்கள் .ஆரம்பித்தது அந்த வலி…. சொல்லமுடியாத

அளவுக்கு சத்தம் போட்டேன்...கூடவே திட்டும் வாங்கினேன்

அங்குள்ளோரிடம் ..


மருத்துவர் வந்து பார்த்து அவசர அவசரமாய் ஏதோ பேசினாங்க..

“ஆபரேஷனுக்கு ரெடி செய்யுங்க” ன்னது மட்டும் பளீரென்றது என்

காதில்….ஐயோ எனக்கு ஊசின்னாலேயே வலிக்குமே....இப்போ

என்ன செய்ய..

என் வயிற்றில் இருப்பது மகள்தான் என்ற நினைவில் வலியிலும்

வேதனையிலும் பேசினேன் அவளிடம்...

அம்மாடி ….செல்லமே உனக்கு பிடித்த நேரத்தில் பத்திரமாய்

வந்து விடுடா ...அம்மாவுக்கு ரொம்ப வலிக்கும்டா….

ரொம்ப வலிக்கும்டா …செல்லம்… எனத் திரும்பத் திரும்பச்

சொல்லிகொண்டேயிருந்தபோது..

உறைவது போன்ற குளிரை எனக்குள் உணர..சில்லென்று ஒரு கை,

சுண்டு விரலில் மச்சத்துடன் …யாரென்று பார்க்க…. அந்தப் புன்னகை மட்டும்

அடிமனதில் பதிய…. அப்படியே மயங்கி ...............


……கண் திறந்தபோது… மங்கலான வெளிச்சத்தில் தோன்றினாள்

“அவள்”…. என் தலையைக்கோதிக் கொண்டிருந்ததை உணரமுடிந்தது….

நான் அதிகசிரமப்பட்டு கண்களை அகல விழிக்க….அவள் ஒரு

பந்துபோல சுருண்டு காற்றாய் எனக்குள் போக…சில மணித்துளிகளில்

…தும்மலுடன் "மகள்" பிறந்தாள் …!

வேதனையின்றி…… என்னையும்…. என் குழந்தையையும்

காற்றைப் போலப் பிரித்தாள் அவள்...!!

Monday, September 3, 2012

வெள்ளை ரோஜா




வண்ணங்களை துடைத்து போன்றது போன்ற வெளிச்சம் என் முகத்தில்.

ஏன் இப்படி என்றும் இல்லாமல் ஒரு பிரகாசம். என்னையே

நான் கேட்டு கொண்டேன் ,கண்ணாடியை பார்த்து.....

நேரம் 8 மணி..ஏன் இன்னும் என் கைபேசி ஒலிக்கவில்லை ..

நேற்று நடந்த சண்டையின் தாக்கமாக இருக்கும் என

நினைத்து கொண்டே ,குளியலுக்கு சென்றேன்....

அம்மா சந்திரா என கூப்பிட வரேன் மா ..என சொல்லிவிட்டு

குளியலறையில் புகுந்து கொண்டேன்..

"நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன சிறகை"

பாடலை பாடிகொண்டே குளியல்.....

அம்மா கத்தி கொண்டே இருந்தார் ..

அம்மா வந்துவிட்டேன் ..சொல்லுங்க ..ம்ம்ம்.

குளிக்க போனால் ஒரு மணி நேரம் எனகேட்டுகொண்டே

எனை பார்க்க, தலை துவட்டியபடியே நான் ....

தினம் தினம் தலையில் தண்ணீர் ஊற்றாதேனு சொன்னால்

கேட்க மாட்டியா?

மூச்சு விடுவதில் பிரச்சனை இருக்கு தெரியுமில்ல ..

என சொல்லிகொண்டே சமையலைறைக்கு சென்றுவிட்டாள்.


"என்ன சத்தம் இந்த நேரம்" என ஒலித்துகொண்டிருந்த

கை பேசியை ஆசையாய் எடுத்தேன் ..

இந்து பேசினாள்....

இன்னைக்கு 11 மணிக்கு பரீட்சை முடிவு ..நினைவிருக்கா....

கொஞ்சம் பயத்துடன் ம்ம்.

நினவிருக்கு..சொல்லிட்டு .....

என்ன அமைதியாய் இருக்க சந்திரா ....

ஏன் நேற்று நடந்ததையே நினைத்து கொண்டிருக்க..

என இந்து கேட்க

அமைதியாய் நான் ..

போன் ஏதும் வரவில்லையா,

குறுஞ்செய்தி கூட வரவில்லையா,

நீயாவது பேசிவிடு...

சண்டையை தொடர்ந்து வைத்து கொள்ளாதே

என சொல்லிகொண்டிருக்கும்போதே தொடர்பு அறுபட்டது...

அந்த அழைப்பு வரும்னு நினத்துகொண்டேயிருக்க

நேரம் ஓடி கொண்டே இருந்தது..ம்ஹ்ம்..வரவில்லை....

மீண்டும்இந்துவின் அழைப்பு ...அம்மா விடம் கொடு...

என்றாள்..

அம்மாவும் அவளும் பேசி கொண்டிருந்தாங்க ..

என்னுடைய சிறு வயது தோழி ஆயிற்றே அவள் ..

அம்மாவிடம் சொல்லிவிடுவளோ என்ற பயம் இருந்து

கொண்டே இருந்தது...அம்மா முகத்தையே பார்த்து

கொண்டிருந்தேன் ..ஒன்றும்

நடக்கவில்லை..சிரித்து கொண்டே இருந்தாள்..

புன்னகைதான் அழகு அவளுக்கு ...எப்போதும்

அப்பாவின் சிந்தனயில் சோகமாய்

இருப்பாள்..ஆனால் இந்து பேசியதால் அழகான புன்னகை முகம் ..

கைபேசியில் அப்படியே ஒரு புகைப்படம் எடுத்தேன் அம்மாவை...


பரீட்சை முடிவு வந்தாச்சுன்னு இந்து போன் செய்தாள்..

நான் எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண் என்று சொன்னாள்.

ஏதும் ஏன் காதில் விழ வில்லை ..ஏன் என்னாச்சு..

நான் பேசட்டுமா அவளிடம் என கேட்க .....வேண்டாம்

இந்து என்றேன் ....

புரிந்து கொள்ளாத என ஆரம்பித்து அப்படியே நிறுத்தி விட்டேன் ...

என்னுடைய வாழ்வில் எப்போதும் வேண்டும் நட்பாய்,

தோழியாய்..நீ மட்டும் ....

உன்னையும் என்னையும் புரிந்து கொள்ளாதா , அந்த காதல்

வேண்டாம் என்றான் சந்திரா என்கிறசந்திரன் ....அமைதியாய் .

நட்பை புரிந்து கொள்ளாத காதல் வாழ் நாள் முழுதும் புகைந்து

கொண்டே இருக்கும்... என்றான்

யோசிக்காதே சந்திரா ....ஏதும்...

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வருகிறேன்....ஏன் கூறி

அழைப்பை துண்டித்தாள் ..

அம்மா என அழைத்து கொண்டே இந்துமதி

வீட்டிற்குள் ....வந்தாள்....

எனக்கு பிடித்த வெள்ளை ரோஜாக்களுடன் ......

நட்பு தூய்மையானது என்றும் ரோஜாவை போல