Thursday, January 19, 2012

ஸ்பரிசம்




ஸ்பரிசம்



உணர்வாலும் எண்ணத்தாலும் மகிழ்ந்த தருணம் எது என
எண்ணி எண்ணி துவண்டு தளர்ந்து கிடந்தாள் இந்து ,

அவள் நினைவினில் தடம் பதித்து சென்ற அந்த தருணம்...
சிந்து பிறந்ததும் அவள் நேரத்தை,
கவனிக்க இன்பமாய் இதமாய் ஒரு ஸ்பரிசம் உரச ...
மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க ....

வேலை வேலை என்றிருந்த நேரங்களில் அவளின் நினவு மட்டும் உரசலாய் ..

சிந்து வீட்டில் இருந்தபோது ஒரே களேபரமாய் இருக்கும்,
பணி முடிந்து திரும்பினால் வீடு முழுதும் புத்தகமாய் ,
பேனாவுமாய்,இறைந்து கிடக்கும்,

இதன் நடுவில் அவள் கையில் மொபைலும் ,
எதிரில் கையடக்க கணினியும் நெட்டுடன் இணைந்து இருக்கும்,
அவளையும் என்னையும் போல ..

அம்மா வருவதை கூட கவனியாமல் ...ம்ம் என கூறி நான் சென்றால் ..

என்னம்மா என்ற கொஞ்சலுடன் கூடிய வார்த்தையில் மூழ்கடிப்பாள்,
எதிர் பாராமல் கட்டியணைத்து முத்தமிட்டு அம்மா என கொஞ்சுவாள்..
கண்ணாலே பேசி என்னை பேசமால் இருக்க செய்வாள்..

கையடக்க கணினி முன் கண்ணாலும் ,குரலாலும் மகிழ்விக்கிறாள்.....

அவள் ஸ்பரிசம் இன்றி ..
அதிக பிணையதொகை கட்டி பராமரிக்கும்

முதியோர் இல்லத்தில் இந்துவாகியநான் இந்தியாவில்

Friday, January 13, 2012

நீர்த்துளி



மனதில் உள்ளவைகளை புரிந்து கொள்ள வந்தாய்
சொல்லியும் சொல்லாமலும் புரியவில்லை
விழி பார்த்து இதயம் உணர்ந்து அறியும் உறவு..........
நினைவுகளின் பயணம் வெகுதூரம் .........
இமைகள் பொருந்திய தடத்தில்.....
எங்கெங்கோ செல்ல
காற்று, மழை ,வெப்பம், நீ நான் என செல்ல ..
பிரிந்த இமை தடத்திலும் நினைவுகள் ...
இமை கதவை அடித்து மூட ...
மீண்டும் இணைந்த தடத்தில் ..
இணையா தண்டவாளமாய் ,
துக்கத்திலும் ஆறுதல்,மகிழ்விலும் பகிர்வு ,
பாசத்திலும் மிஞ்சாமல் பரிவுடன்...
அலையும் விரல்அளந்து.. இமை தடத்தில்
நேர்கோடாய் அருகில்...
எண்ணங்களால் அடித்து செல்ல நிழலாய் ..
விழியோரம் கசியும் துளி நீர் வெள்ளமாய் பெருக..
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இமை தடம் ..
மூழ்கி பாதை பிரிய ..விக்கித்து நிற்க விழி...
இறுகிய இதயம் செயலிழந்து ...
பார்த்து உணர்ந்த உறவு பரிதவித்து போக...
புரியும் நிலையில் புரிந்து கொள்ள முடியாமல் ..
விக்கித்து நிற்கும் விழி பார்த்து ஒரே தடத்தில்
விழித்து நிற்க ...நீர்த்துளி தானே வழிந்து
தன் பாதை தேடி ..........

Sunday, January 1, 2012

விழி வழி தேடுகிறேன்



புன்னகையுடன் ..
சிறு துளியோரப்பார்வை ..
பேசுகையில் சட்டென திரும்பி வரும் பார்வை ..
கவனிக்க வைக்கும் அந்த பார்வை ..
கை மறைத்து பார்க்கும் பார்வை ...
கோவமாய் பார்வை பார்க்க நான் ...
சட்டென திரும்பும் பார்வை ...
ஏங்குகிறேன் அதற்க்கு ....
நாளும் கடக்க மீண்டும் பார்வை..
தாக்குகிறது பார்வையால் என்னை...
கோபத்திலும் பார்வை..ரசிக்க
பார்வைக்காக ஆடுகிறேன் ...
பாடுகிறேன் தூங்க மறுக்கிறேன் ..
நமக்கான பார்வை இதுதானா என..
தேட தேட கிடைத்தது பார்வை..
உன் விழி என் பார்வை...நீ பார்த்த பார்வை ...
தேடுகிறேன் தேடுகிறேன் நான் இன்று
எதை தேடினேன்.... தேடுகிறேன்
புரியவில்லை...விழி வழி...............

நினைவுகளுக்கும் மரணம் .. மௌனம் ...




பேசுதலும் ........பார்த்தாலும் ..மௌனம்
எப்போதும் வரும் விழியோர கண்ணீரும் மௌனம்
எப்போதோ வரும் இதோழர புன்னகையும் மௌனம்
எப்போதும் தொட்டு செல்லும் காற்றும் மௌனத்தில் இன்று..
எப்போதும் ஓடி கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும் மௌனம்
எப்போதோ நடந்த நிகழ்வுகள் ,விழி விரிந்த புன்னகையின் நினைவுகள்
எப்போதும் அங்கே கூட்டி செல்கிறது .
எப்போதும் உள் செல்லும் காற்று வெப்பமாய் இன்று
...மௌனமாய் இருக்க சொல்லிவிட்டு..
குளிர்ந்து மௌனமாய் மௌனமாகியது ..ம்... மௌனம்
இனி நினைவுகளும் மௌனமாகியது....
தொடர்வேன்..காற்றால் மௌனமாய் .. உன்னை

Friday, December 30, 2011




புதிதாய் நீ..

ஒவ்வொரு முறையும்
உன்னை அதிகமாய்
புரிந்து கொள்கிறேன் ..ஆழமாய்
நெருங்குகிறேன்
உன் சிறு சண்டைகளுக்கு பின்..
உன்னையும் என் போலவே எண்ணுகிறேன்
நீ கொண்ட அதீத பாசம் என்னை
சண்டைக்குள் இழுக்கிறதே ..அதனால் என்னவோ
மௌனமாய் உன் முன் ...உன் மூச்சு காற்றின்
நெருக்கத்தில் இடை வளைத்து,
என் உயரம் வளைத்து ... உன்னை
என் இதழ் சேர்த்து ஆழமாய் நெருங்குகிறேன் ..சண்டைகளிணுடே..
புதிதாய் நீ ஒவ்வொரு முறையும் ....

Wednesday, August 24, 2011


குறுகுறு பார்வை ..
கேள்விக்கு சீண்டலான பதில்..
கைபேசியும்.கையடக்க கணினியும் ..
காணாமல் தேடும் மனம் ..
பார்க்கும் பார்வையிலெல்லாம் காண..
...சிறு தகவல் எதிர் கொண்டு கை பேசி கிடக்க ..
குரல் கேட்குமோ என நினைக்க ..மொழி...
என்ன ..மொழி .. எதை எதிர் பார்க்கிறது மனது.
.எந்த அலைவரிசையை எதிர் பார்க்கிறது... .... எண்ணஅலைவரிசையில் ராகம் பாட

..தனிமை...மட்டுமே யடி கண்ணே ....
நொடி பொழுதில் ,இவையனைத்தும் காணவில்லை...
விழித்தேன் ..அணைத்தபடி மகளே அருகினில் .. ....

Thursday, August 18, 2011



நிலவை கவிழ்த்த ...
ஆதவனின் வருகை கண்டு ...
வெளுத்த மேகங்கள் கூடி ....
நிலவில்லாத மேகத்தின் துணை கொண்டு...
கவிழ்த்தன ஆதவனை .....
...இருள் சூழ்ந்து...இதமான தென்றல் வீசி...
ஒய்யார மழை ....
சிரித்து,,,,
துவண்டு...வாடி..உதிர்ந்து ..தனியனாய் .......
சிலிர்த்து ..தளிர்த்து புதியவனாய் ......
மழை ..