Sunday, January 9, 2011

அவனும் கனவுகள் கொண்ட மனித இனம்தான்








தான் நினைத்தது தான் சரி என்று யோசிக்காமல்..
எப்போதும் மற்றவர்களின் கருத்தையும் அலசி பார்க்கவேண்டும்..
திருமணம் என்பது நமது சமுகத்தின் நம்பிக்கை..

அனால் இன்றைய காலகட்டத்தில்
அது தேவை படுவதில்லை.நம் இளைஞர்களுக்கு ..
படிக்கும்போதே காதல்..உடனே திருமணம்..தெரிந்தும் தெரியாமலும்...
வாழ்க்கைஎன்னவென்று தெரியாத வயதில் அது ஆரம்பித்து விடுகிறது..பெண் வளர்ந்த சூழல்.ஆண் வளர்ந்த சூழல்...இவை எல்லாமே ஒரு சிலமாதங்களுக்கு அவர்கள் நினைவில் இல்லை..அனால்..பிள்ளைகள் பெற்றதும்.பொருளாதாரமின்மை, இதன் காரணமாக பெண் வேலைக்கு செல்லும் போது அவளின் நிலை கண்டு ஏமாற்றும் உலகம்...இதன் விளைவு காதல் கணவனை மற்றவர்கள் முன் அவமானபடுத்துவது..அவன் சரியில்லை குடிக்கிறான் எதற்கும் லாயிகறவன் என்று குறை கூறுவது..இது என்ன?? இதுவே அவர்களின் பிரிவுக்கும்.. அது இந்த காதல் இனகவ்ர்ச்சிதான் என்று தெரிவதற்குள் அவன் வாழ்கை வீணாகிவிடுகிறது..அவன் பெற்றவர்களின் ஒரே வாரிசாக இருந்தால்..இன்னும் அவமானம் தான்..
இது ஒரு கால கட்டம்....
அனால் இன்றைய சூழல் ..
படிக்கும் போதும் வேலை செல்லும் போதும் வரும் காதல் சாதிக்கிறது..ஒரு 75 % விழுக்காடு
அனால் இன்றைய படித்த இளைஞர்களின்/இளைஞிகளின் நிலை
உனக்கு பிடிகிறதா .எனக்கு பிடிகிறதா சேர்ந்து வாழலாம்..
சேர்ந்து அனுபவிக்கலாம் தவறில்லை..அனால் மணம் என்று வந்தால் அவர் அவர் வீட்டின் நிலைபாடிற்கேற்ப
வேறு ஒருவனை மணம் செய்து கொண்டு உள் நாட்டிலோ ..வெளி நாட்டிலோ வாழ்கிறார்கள்...

ஒன்று மட்டும் புரிவதில்லை..எனக்கு
ஏன் மணம் செய்யும் பொழுது நம்மால் ஏற்று கொள்ள முடிந்த நம் காதலன் ..பின் கணவனான பிறகு அவன் செய்யும் எதையும் ஏற்று கொள்ள முடிவதில்லை அன்று அவன் சிகரட் பிடித்தாலும் சுப்பர் தான். மது குடித்தாலும் சூப்பர் தான் அவனை நீயே தூண்டி விட்டு இது செய் நீ இப்படி இருப்பாய்..அதை செய் நீ அப்படி வருவாய் என்று அவனை அன்றே உன் கண் சொல்லும் வேலைக்கு அடிமை படுத்திவிட்டாயே ..அவனுக்கும் தனி சிந்தனைகள் இருக்கும் என்றாவது நினைத்திருப்பயா ..அவனும் கனவுகள் கொண்ட மனித இனம்தான்.. இதில் பிள்ளை இருந்தால் இன்னும் அவள் பாடு கொண்டாட்டம் தான்..அதை அவன் கண் முன் காட்டாமல் அவள் அழைத்து சென்று விடுவது..அவனே வேண்டாம் அவனுடிய பிள்ளை மட்டும் தேவையா .காதல் என்ற ஒரே தவறு தான் அவன் செய்தது..அனால் அவன் நிலை ???//

Wednesday, December 8, 2010

கரை சேரா மீனவனே ...

கரை காணமுடியா வெள்ளத்தில் ...
கரை தேடி சென்ற ..உன்னை காண
கண் துயில மறுக்கிறதே..
உணர்வுகள் மறந்து....நாட்கள் நகர்ந்து ..
விழி கரை கடந்து.வெள்ளம் வற்றி..
வறண்ட விழிகளுக்குள் ..
கரை காண முடிய வெள்ளத்தில் நீ ......

Monday, December 6, 2010

மழை .

உன் சந்தோசாமா..இது
உன் கோவமா... இது..
உன் ஆதங்கமா... இது..இல்லை
உன் எண்ணங்களின் வடிவமா... இது.
.இல்லை.. இல்லை
ஆதவனை எழுப்ப மனமே இல்லை.. உனக்கு.....
வாட்டுகிறதே..புயல் மழை ...

Saturday, December 4, 2010

பார்வையிலே பரிமாறி..
பாசம் கொண்ட பெற்றவளின் துணையோடு ..
உன்னை அடைந்தேனடா ..கண்ணா..
கண் பட்டதோ ..என் வாழ்வில் ..எனை
விட்டு போக நீ ஆயத்தம் ஆகிறாயேடா..
மனம் புரிந்து வாழ்ந்தேனடா..ஒரு திங்கள்..
எங்கிருந்துடா வந்தது உனக்குண்டான காகிதம்..
காலனிடத்திலிருந்தா..

பெற்றோரும் .உற்றோரும் வரவில்லையடா..
உன்னை நான் தாங்குவேன் என்று என்னிடத்தில்
கொடுத்தானடா ஆண்டவன்..அவனே விரும்ப மாட்டான்டா ..
நீ எனை விட்டு செல்ல..என்ன செய்வேனடா நான்..நீ இன்றி இவ்வுலகில்...

Sunday, October 17, 2010

விட்டுக் கொடுங்கள்;
விருப்பங்கள் நிறைவேறும்......................

.தட்டிக் கொடுங்கள்;
தவறுகள் குறையும்...
மனம் விட்டுப் பேசுங்கள்;
அன்பு பெருகும்.
கண்மணியே....
நீ என் கண்மணியடி..
கண்கள் விரிவதை பார்க்கலியாடி..என் கண்ணே ..
உன்னை காணமல்...கண்டவுடன்..
சொற்களில் உள்ள வேகத்தை மட்டுமே ...
கண்கொண்டு கொண்டாயடி ...என் கண்ணே ..
சொற்களில் பாசத்தை காட்ட தெரியவில்லையடி..
வந்து நீயாக என்னை காட்டி கொள்வாயடி என நினைதேனடி..என கண்ணே
என்றுமே..நீ என் கண்மணியடி..

Saturday, October 16, 2010

அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

பிடித்ததெல்லாம்கிடைத்தவுடன்..
உன் கண்கள் விரியும் அழகு..
உன் மெல்லிய புன்னகை...
மௌனத்திலும் உன் அழகு ..
கோபத்திலும் உன் அழகு..
உன்னை காணாமல் இருக்க முடியவில்லையடா..
அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

பள்ளி அனுப்பியே பரிதவித்தவள் நானடா..
நீ வரும் முன் நான் இருக்கவேண்டும் என நினைத்தவள் நானடா..
விடுமுறை நீ எடுத்தால்.. பணிக்கு விடுப்பு எடுக்கும் ஆளடா நான்..
கல்லூரி சென்றாலும்..உன் முதல் நாளில் நானும்..வாசலில் நின்றேனடா.. .
அலைகிறது. மனம்...
ஒத்தையாய் பெற்றதாலோ ..

அனுமதி பெற்று நீ சென்றிருந்தாலும்..
சந்தோசமாக அனுப்பிருந்தாலும்..
கொஞ்சம் எட்டி பார்கிறதடா..என் அப்பாவின்..குணம் .
எங்கேயும் அனுப்பமால்..தன் பார்வையிலே நாங்கள் இருக்கவேண்டும் -என்ற
அவரின்..பாசமிகு..எண்ணங்கள்..
செல்லம் என்பதால்..உன் கனவுகளை நிறைவேற்றும்..
என் எண்ணங்கள் ...அலைகிறதடா
மனம்...ஒத்தையாய் பெற்றதாலோ...என்னவோ ....